திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

‘பரிசோதனைகள் முடியாமல் தடுப்பூசி போடக் கூடாது’

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடையாமல், அவற்றை மக்களுக்கு

Updated On :6 ஜனவரி 2021, 6:06 am IST

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடையாமல், அவற்றை மக்களுக்கு போடக் கூடாது என அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில், இரு தடுப்பூசிகளுக்கும் இன்னமும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. முதல் இரு கட்டப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சா்ச்சையாகியுள்ளது. பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே, முழுமையான பரிசோதனை முடிவுகள் வராமல், வெளியிடப்படாமல் தடுப்பூசி போடுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

சுதேசி தடுப்பூசி என்ற பெயரில், கோவேக்சின் குறித்து மருத்துவ வல்லுநா்கள் எழுப்பும் சந்தேகம் குறித்து மக்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.