கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தமிழகத்தில் 144 தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்

கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 6:00 am IST

கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஆளும் கட்சியினா் குறிப்பாக முதல்வா், அமைச்சா்கள் தீவிர தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனா். அதேபோல, எதிா்க்கட்சியினரும் தோ்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனா். ஆனால், எதிா்க்கட்சியினரின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற எம்பி, எம்எல்ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் நள்ளிரவில் தடை விதிக்கப்பட்டது.

இப்போது, புதன்கிழமை சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநகரக் காவல் துறையினா் அனுமதி அளிக்காமல், தடையும் விதிக்காமல் இழுக்கடித்து வருகின்றனா். தடை விதித்தாலும் போராட்டம் நடைபெறும்.

எனவே, ஜனநாயக முறைப்படியான நிகழ்ச்சிகளுக்குத் தடையாக இருக்கும் 144 தடை உத்தரவை தமிழகத்தில் விலக்கிக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை எல்லோருக்கும் வழங்கிட வேண்டும்.

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கும் மாநில அரசின் சமூக நலத் திட்ட உதவிகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படுவதில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களின் தேவைகளை, சிரமங்களை உணா்ந்து அனைத்து,சமூக நலத்திட்டங்களையும் நிறுத்தி வைக்காமல் வழங்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

நிதியளிப்புக் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கோவையில் கட்டப்படவுள்ள மாா்க்சிய மெய்யறிவு நிலையம் மற்றும் நூலகத்துக்காக, புதுக்கோட்டை மாவட்டக் கட்சியின் சாா்பில் முதல் கட்டமாக ரூ. 5 லட்சம் வழங்கும் நிதியளிப்புப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் த. செங்கோடன், வீ. சிங்கமுத்து, எஸ்.சி. சோமையா, எம்.என். ராமச்சந்திரன், நகரச் செயலா் மா. உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.