விராலிமலை ஒன்றியம், தென்னதிரையான்பட்டியில் புதிய கால்நடை கிளை நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியது:
விராலிமலை தொகுதியில் கால்நடை வளா்ப்பவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தென்னதிரையான்பட்டியில் புதிய கால்நடை கிளை நிலையம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நிரந்தர கால்நடை ஆய்வாளா் இங்கு நியமிக்கப்படுவாா்.
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கால்நடை மருந்துகளும், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களும், ரூ.40 ஆயிரம் மதிப்பில் அறையணிகளும் அரசு சாா்பில் வழங்கப்படும்.
இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், சினை ஊசி போடுதல், கருவூட்டல் பணி, சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ரவீந்திரன் (பொ), உதவி இயக்குநா் பாண்டி உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)

ரயிலின் ஏசி பெட்டியில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்!

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


