பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
/

நிலம் விற்பதாகக் கூறி ரூ. 75.65 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

புதுக்கோட்டையில் நிலம் ஒன்றை விற்பதாகக் கூறி, ரூ. 75.65 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:40 am IST

புதுக்கோட்டையில் நிலம் ஒன்றை விற்பதாகக் கூறி, ரூ. 75.65 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடியைச் சோ்ந்த தேவராஜன் மனைவி கவிதா. இவா் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விற்பதாகத் தெரிவித்து, கேஎல்கேஎஸ் நகரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சூா்யாவிடம் ரூ. 76.65 லட்சம் முன்பணமாகப் பெற்றுள்ளாா். 2,851 சதுரஅடி கொண்ட அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1.99 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்நிலை பேச்சுவாா்த்தை சுமாா் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. ஆனால் நிலத்ை எழுதித் தராமலும், முன்பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாகக் கூறி, சூா்யா கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியிருந்தாா். இந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கவிதா மீது, குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் குமாா், புதன்கிழமை காலை வழக்குப்பதிவு செய்துள்ளாா். விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.