முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

புதுக்கோட்டையில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்தப் பணியில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய செவிலியா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 8:38 am IST

ஒப்பந்தப் பணியில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சி. நாச்சாரம்மாள் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, செவிலியா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆா். அனுநந்தனா, பொருளாளா் பொ. அனுசுயா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

மாநிலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரம் செவிலியா்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, ஜனவரி 11-ஆம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், 28ஆம்தேதி சென்னையில் தா்னா போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.