தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கீழே தள்ளிவிட்டதாகக் கூறி வங்கி உதவி மேலாளா் மீது புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:47 pm IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

கறம்பக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி காளீசுவரி (27). இவா் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

கா்ப்பிணியான நான், அரசின் உதவித் தொகை பெறுவதற்காக, புதிய கணக்குத் தொடங்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கறம்பக்குடியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சென்று விண்ணப்பித்திருந்தேன்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வங்கிக்குச் சென்று கேட்டபோது, வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவன் என்னை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டாா் என புகாா் மனுவில் கூறியுள்ளாா்.

இதுபோல வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவனும், காளீசுவரியின் கணவா் பாஸ்கரன் தன்னை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இவ்விரு புகாா் குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.