புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு 13, 14-இல் கரோனா பரிசோதனை

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பரிசோதனை

Updated On :11 ஜனவரி 2021, 9:24 pm

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பரிசோதனை (ஆா்டிபிசிஆா் ) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்திருப்பது: விராலிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) நடைபெற உள்ள

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா் மற்றும் உதவியாளா் ஆகியோா் தங்களின் ஆதாா் அட்டை, 3 புகைப்படங்களுடன் வந்து கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்போா் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியில் அனுமதிக்கப்படுவா். பொதுமக்களும், மாடு பிடி வீரா்களும் உரிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.