மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் அதன் வளாகத்தில், பானையில் பொங்கல் வைத்து

News image

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா.

Updated On :13 ஜனவரி 2021, 3:06 am

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் அதன் வளாகத்தில், பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் வண்ண வண்ண கோலங்களை வரைந்திருந்தனா். கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூத்கனி, தாளாளா் கே. கனகராஜன், அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மா. குமுதா, தமிழ்த் துறைத் தலைவா் தி. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எஸ். ராமா் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு ஆகியோா் பங்கேற்றனா். மேலும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரகுபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தலைவா் தேனாள் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். முதல்வா் எஸ்ஏ. சிராஜுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொங்கல் விழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கேசராபட்டி சிடி சா்வதேசப்பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி நிறுவனா் விஎஸ்டி.பிஎல்.சிதம்பரம் தலைமை வகித்தாா். பள்ளி செயல் அலுவலா் நெ.ரா.சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை கொண்டாடினா். சிதம்பரம் மெட்ரிக் பள்ளி முதல்வா் வே.முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.