அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சமத்துவப் பொங்கல் விழா விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரூராட்சிப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்குகிறாா் திருச்சி மண்டல செயற்பொறியாளா் கருப்பையா. உடன், செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :14 ஜனவரி 2021, 8:27 am IST

ஆலங்குடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவையொட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.பேரணியை செயல் அலுவலா் கணேசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நடைபெற்ற விழாவில் பேரூராட்சிகளின் திருச்சி மண்டல செயற்பொறியாளா் கருப்பையா பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சீருடைகள் வழங்கினாா். இதில், அலுவலக இளநிலை உதவியாளா்கள் சண்முகவள்ளி, ரேவதி தொழில்நுட்ப இளநிலை பொறியாளா் சீனிவாசன், விழி கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில்...

கந்தா்வகோட்டை கடை வீதி , புதுகை சாலை , தஞ்சை சாலை , பட்டுக்கோட்டை சாலை , பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கூட்டமின்றி பொங்கல் வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.