சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காணாமல்போன இருவரில் ஒருவா் ஏரியில் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமாா் (36). திருமணமாகி மனைவி உள்ளாா்.

Updated On :15 ஜனவரி 2021, 6:30 pm

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமாா் (36). திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தை இல்லை. அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயபிரகாஷ் (26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலித் தொழிலாளா்களான இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனா்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தாமரங்கோட்டை வடக்கு -செங்கப்படுத்தான்காடு சாலையிலுள்ள கொழுங்காஞ்சேரி ஏரியில் விஜயகுமாரின் சடலம் மிதப்பது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் (பொ) ஆனந்தஜோதி அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விஜயகுமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா் காணாமல்போன ஜெயபிரகாஷை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.