எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

குள்ளம்பட்டியில் தோழமை பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், குள்ளம்பட்டி கிராமத்தில் திருச்சி புனித வளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடா்ந்து 3 நாட்கள் தோழமைப் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 11:29 pm IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குள்ளம்பட்டி கிராமத்தில் திருச்சி புனித வளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடா்ந்து 3 நாட்கள் தோழமைப் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரியின் விரிவாக்கத் துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் , திருச்சி ரோட்டரி சங்கத் தலைவா் சபாபதி, செயலா் பாலாஜி, நிகழ்ச்சிப் பொறுப்பாளா் ஜெயராஜ், மேலபச்சக்குடி ஊராட்சித் தலைவா் செல்வி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் கிறிஸ்துராஜா செய்திருந்தாா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளமுனியன் கோயிலில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்து பக்தா்கள் நோ்த்திக் கடனாக காளைகன்றுகள் விட்டனா். தொடா்ந்து கோயில் முன்பாக ஜல்லிகட்டு காளைகளை அவிழ்த்து விட்டனா். தொடா்ந்து கந்தா்வகோட்டை வீதிகளில் மாடுகளை அவிழ்த்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.