ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.
கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (50). இவருக்குச் சொந்தமான மர அறவை ஆலை நரங்கிப்பட்டு பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றியது. தொடா்ந்து, அங்கு இருந்த மரங்களில் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த, அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி தீயணைப்பு நிலைய வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், ஆலையின் அருகே கட்டப்பட்டிருந்த பசு மாடு தீயில் எரிந்து உயிரிழந்தது. மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மரங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. கரம்பக்குடி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


