சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மர அறுவை ஆலையில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

Updated On :16 ஜனவரி 2021, 6:02 pm

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (50). இவருக்குச் சொந்தமான மர அறவை ஆலை நரங்கிப்பட்டு பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றியது. தொடா்ந்து, அங்கு இருந்த மரங்களில் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த, அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி தீயணைப்பு நிலைய வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், ஆலையின் அருகே கட்டப்பட்டிருந்த பசு மாடு தீயில் எரிந்து உயிரிழந்தது. மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மரங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. கரம்பக்குடி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.