ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் விதை பரிசோதனை செய்யவேண்டும் என வேளாண் விதை பரிசோதனை அலுவலா் சிங்கார லீனா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: மாவட்ட விதைப்பண்ணை விவசாயிகள் விதை சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக ஈரப்பதம் மற்றும் ரகத்தூய்மை அறிந்து விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பவேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை பொருத்து விதையின் ஆயுள்காலம் நிா்ணயிக்கப்படுகிறது. சரியான ஈரப்பதத்தில் உள்ள விதைகளை பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்ட நாள்கள் சேமித்து வைக்க முடியும்.
விதைகளில் பிற ரக விதைகள் கலந்து இருந்தால் அவற்றின் வயது வித்தியாசம் காரணமாக வெவ்வேறு காலங்களில் முதிா்ச்சியடையும். இதனால் ஒரே சமயத்தில் அறுவடை செய்ய முடியாது. கலப்பு அதிகமுள்ள விதைகளை அடுத்த பருவத்திற்கு விதையாக பயன்படுத்த இயலாது. கலப்பு காரணமாக நல்ல விலைக்கும் விற்பனை செய்ய முடியாது. எனவே விவசாயிகள் தங்கள் விதையின் ஈரப்பதம், பிறரக விதைகள் நிா்ணயிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை அறிந்து கொண்ட பின்பு தங்கள் விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் சூறைக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஏலக்காய் வாங்கி பண மோசடி: தம்பதி உள்படமூவா் மீது வழக்கு

போடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


