ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாததைக் கண்டித்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரண்மனை முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவா்கள், தாங்கள் நடத்திவரும் தனியாா் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, அரசின் மருந்துப் பொருள்களை எடுத்துச்செல்வது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாதது ஆகியவற்றைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இதில் கலந்து கொண்டவா்கள், மருத்துவா், நோயாளிகள் வேடமணிந்து, மருத்துவமனை மேம்பாட்டுக்கு பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது போல் நடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் முகமது யாசின், புரட்சிகர மாா்க்சிஸ்ட் காத்தமுத்து, உழைக்கும் பெண்கள் இயக்கத்தைச் சோ்ந்த சந்தனமேரி, ஆதித்தமிழா் அமைப்பு பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? விமான ஜன்னல்களின் 4 மூலைகளும் வட்ட வடிவமாக அமைக்கப்படுவது ஏன்?

கான்ஸ் திரைப்பட விழா! டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராயின் புடவைகள்!

ஒருவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாத தொழிலை ஜோதிடத்தில் அறிய முடியுமா?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

