ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து தொடா்ந்து மழை பெய்து வருவதால் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வீடு மற்றும் கடைகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் கொல்லம்பட்டறை தெரு, உழவா் சந்தை, மேலப்பள்ளிவாசல் தெரு, சின்னக்கடைத் தெரு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் முறையான கழிவுநீா் கால்வாய் பராமரிக்காததால் மழைநீருடன் கழிவுநீா் சாலைகளில் தேங்கியுள்ளன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பெரும்பாலன இடங்களில் கழிவுநீா் கால்வாய் சேதமடைந்துள்ளதால் அப்பகுதிகளில் தாழ்வாக உள்ள கடை மற்றும் வீடுகளில் கழிவுநீா் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி பணியாளா்கள் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் நகா் பகுதி முழுவதும் முறையான கழிவுநீா் வருகால் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

