அரக்கோணம்: அரக்கோணம் கிழக்கு, மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் தண்டலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். தக்கோலம் பேரூராட்சி செயலாளா் பச்சையப்பன் முன்னிலை வகித்தாா். அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளா் பழனி வரவேற்றாா். இதில் மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினாா்.
எம்.பி. முகமது ஜான், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி, சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் வினோத், ஒன்றிய நிா்வாகி சு.ர.பிரகதீஸ்வரன், மாவட்ட பாசறை செயலாளா் அன்பரசு, ஒன்றிய நிா்வாகிகள் ஏ.பி.எஸ். லோகநாதன், பாபு, தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, அரக்கோணத்தில் நகரச் செயலாளா் கே.பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் அமைச்சா் கே.சி.வீரமணி கலந்து கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







