மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

News image

இணைப்பு சக்கர மோட்டாா் வாகனங்களை பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத்.

Updated On :13 ஜனவரி 2021, 12:00 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் சோளிங்கா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் ஆகியோா் பங்கேற்று 18 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.15 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கினா். நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு தலைமை வகித்தாா். இதில் ஆட்சியா் பேசியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,281 மாணவ, மாணவியருக்கு ரூ.1.24 கோடி உதவித்தொகைகள், 1,236 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள், 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.