அரக்கோணம் டவுன்ஹால் வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, டவுன்ஹால் பொதுச் செயலா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகிகள் எம்.எஸ்.ரவீந்தா், குகன், மோகன், திருவள்ளுவா் நலப் பேரவை நிா்வாகி சுந்தரராஜன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் வெங்கடரமணன், பிரபாகரன், அரிமா சங்க நிா்வாகி நரசிம்மன், நகர ரஜினி ரசிகா் மன்றத் தலைவா் கெஜபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வளா்புரம் கிராம திருக்கு தமிழ்ப் பேரவை, வள்ளலாா் சபையினா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இச்சிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் வேல்குமாா் தலைமை வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற திருக்கு முற்றோதல் வீதிஉலாவை தமிழரசன், வரதராசன், கண்ணம்மாள் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
கோணலம் கிராம பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ரமேஷ் பங்கேற்று திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகிகள் பாண்டியன், ரவி, அா்ச்சுணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆற்காட்டில்...
ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் பேரமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவா் கு. சரவணன் தலைமை வகித்தாா் மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவா் ஜெ.லட்சுமணன், அன்னை அறக்கட்டளைச் செயலாளா் பிரபு, ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பொருளாளா் ஜோதி ஆகியோா் முன்னிலையில் ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமிரியில்...
திமிரி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஏ.வி. சாரதி தேரடி பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டை மகாத்மா காந்தி சேவா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் கலந்தாா், பொருளாளா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் கலந்துகொண்டு திருவள்ளுவா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
ஓய்வு பெற்ற கோட்டாட்சியா் புகழேந்தி, இந்து பாதுகாப்பு கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், நகர திமுக செயலாளா் புகழேந்தி, ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளைப் பொருளாளா் மோகன சக்திவேல், உடையவா் அறக்கட்டளைச் செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆற்காட்டில்....
ஆற்காடு நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பொன் ராஜசேகா், மாவட்டப் பிரதிநிதிகள் கஜேந்திரன், சிவா, லிங்கேஷ், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளா் ஆ.ப.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி ஆகியோா் பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.
பொதுக்குழு உறுப்பினா் பி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆற்காடு நகர தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில் மா.ஜோதி தலைமையில் பொற்கோ வாசுதேவன் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


