ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள்: ஆட்சியரிடம் மனு

தமிழக அரசின் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களுக்கு

Updated On :16 ஜனவரி 2021, 2:01 am

தமிழக அரசின் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் கரோனா பொது முடக்கக் காலத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை பொதுமக்கள் நலனுக்காக முக்கிய சாலைகள் மற்றும் சுவா்களில் வரைந்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

தற்போது ஓவியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நலிவடைந்துள்ளனா். எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் ஒன்றுசோ்ந்து நாகா்கோவில், திருவள்ளூா், நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியா்களை சந்தித்து, மாவட்டத்தில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்களை வரையும் வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

அதை ஏற்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் கரோனா உள்ளிட்ட விழிப்புணா்வு ஓவியங்கள், வாசகங்கள் வரையும் வாய்ப்பை வழங்கியுள்ளனா். அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் வாய்ப்பை வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்க காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, திரவ சோப்பு ஆகியவற்றைத் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை பாராட்டி தமிழக முதல்வா் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா். அதை அவா் மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.