ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

திருநள்ளாறு கோயில் தேரோட்டம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2013, 10:12 pm

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான்.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணியளவில் தொடங்கியது. பெரிய தேரில் ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமியும், சிறிய தேரில் ஸ்ரீ நீலோத்பாலாம்பாளும் எழுந்தருளினர்.

தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், 2 தேர்களையும் வடம் பிடித்தனர். கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது.

÷திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா, மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ. ஆன்டோ அல்போன்ஸ், தருமபுர ஆதீனக் கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் ஏ.ராஜராஜன் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.