நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

News image
Updated On :2 அக்டோபர் 2017, 12:18 pm IST

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

• விக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம். 

• வீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம். 

• அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம். 

• கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம். 

• திருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம். 

•  மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வழிபடலாம். 

• புத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம். 

• புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம். 

• தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம். 

• வீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம். 

• பில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம். 

• நோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். 

• ஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம். 

• மனவலிமை, உடல் வலிமை பெற  ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம். 

• விவசாயம் தழைக்க  ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம். 

• உணவுக் கஷ்டம் நீங்க  ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம். 

• பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.