தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

விரைவில் கோயில் பிரசாதங்களுக்கும் வருகிறது காலாவதி தேதி!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும்  பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. 

News image
Updated On :24 ஜனவரி 2018, 10:56 am

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும்  பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. 

அந்தவகையில், புகழ்பெற்ற பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிருதம் முன்னிலை வகிக்கிறது. இந்து சமய மற்றும் அறநிலைத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களான, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இட்லி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் புட்டு என ஒவ்வொரு கோயிலிலும் வழங்கப்படும் பிரசாதங்கள் பிரபலமானவை. 

இந்நிலையில் கோயில்களில் தயாரித்து வழங்கப்படும் உணவு இந்தியா உணவுப் பாதுகாப்பு விதியின்படி தயாரித்து வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்காக, கோயில்களில் பிரதாசம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதேப் போன்று பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் என்ற தேதியை அச்சிட்டு வினியோகம் செய்யும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாகக் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிருதங்களை ஆய்வு செய்து காலாவதி தேதியை அச்சிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.