திருச்சானூரில் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம். 
பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம். 
Updated on
1 min read

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வேண்டி இக்கோயிலில் ஆண்டுதோறும் வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி திருச்சானூரில் இந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. 
நிறைவு நாளான திங்கள்கிழமை மதியம் வசந்த மண்டபத்தில் தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், குங்குமம், உலர்பழங்கள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் சர்வ அலங்காரத்துடன் மாடவீதியில் வலம் வந்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com