அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வாரி இறைத்து மக்கள் நேர்த்திக்கடன்

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற மாங்கனி திருவிழா விமரிசையாக இன்று நடைபெற்றது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:04 pm

DIN

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற மாங்கனி திருவிழா விமரிசையாக இன்று நடைபெற்றது. அம்மையாரின் வாழ்க்கை முறைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தில் திருவிழா நடைபெறுகிறது. 

இந்நிலையில் இன்று காலை பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மர்த்திக்கு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சிவபெருமான் காரைக்கால் அம்மையிடம் வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

குழந்தை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை இறைப்போருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இன்று மாலை 6 மணிக்கு ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், நாளை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் எலும்புருவுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.