பழனி: பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். காஞ்சிபுரம் இட்லி, மதுரையில் புட்டு, திருப்பதியில் லட்டு என ஒவ்வொரு கோயிலிலும் வழங்கப்படும் பிரசாதங்கள் பிரபலமானவை. அந்தவகையில், பழனி என்றாலே பஞ்சாமிருதம் தான் நினைவுக்கு வரும்.
இதற்கு முன்னதாக, கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலைத்துறையின் ஆலோசனையின் படி பழனி முருகன் கோயிலில் தயாரித்து விநியோகிக்கப்படும் பஞ்சாமிருதம் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று டப்பாவில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
தயாரிப்பு தேதியுடன் விற்பனை செய்யும் இந்த முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


