ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருட சேவைக்காகப் பாரம்பரியமாக திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்படும்.
ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் செப்டம்பர் 11(நாளை) காலை 10.31 மணிக்கு பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புறப்படவுள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த ஊர்வலம் என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்கும்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12-ம் தேதி, ஐசிஎஃப், ஜிகேஎம் காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து அங்கு இரவு தங்கும்.
செப்டம்பர் 13-ம் தேதி பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்கும்.
செப்டம்பர் 14-ம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர், வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைந்து இரவு தங்கும்.
தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து செப்டம்பர் 16-ம் தேதி திருமலை செல்கிறது.
அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம், மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் பிற்பகல் 3 மணிக்கு திருக்குடை முறையாக சமர்ப்பணம் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


