திருப்பதி ஏழுமலையானுக்கு உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கீரிடம், மாலைகள் நன்கொடை (விடியோ)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக..
திருப்பதி ஏழுமலையானுக்கு உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கீரிடம், மாலைகள் நன்கொடை (விடியோ)
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக உலர் பழங்களைக் கொண்ட மாலைகள், கிரீடங்களை திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஒன்பது நாள் நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த செப்.13-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, காலை - மாலை என தினமும் ஒரு வாகனத்தில் தயாருடன் மலையப்பசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையானுக்கு தினமும் பிற்பகலில்  சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்று நடைபெறும் திருமஞ்சனத்தில் மலையப்பசுவாமியை அலங்கரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் உலர் பழங்களை கொண்ட கிரீடம் மற்றும் மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் ரூ.5 லட்சம் செலவில் பிரத்யேகமாக தயார் செய்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com