மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

108 சக்தி பீட ஆலய மகா கும்பாபிஷேகம் (புகைப்படங்கள்)

காஞ்சிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட 108 சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 6:11 am

DIN

காஞ்சிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட 108 சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சுங்குவார்சத்திரத்தை அடுத்த கண்ணந்தாங்கல்-மதுரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணந்தாங்கல் கிராமத்தில் 108 சக்தி பீட ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நான்கு ராஜகோபுரங்களுடன், மூலவராக ஸ்வர்ண காமாட்சி அம்மன் காட்சியளிக்கும் இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பிப்.1-ம் தேதி காலை கோபூஜையுடன் தொடங்கியது.

Story image

இதைத் தொடர்ந்து 6-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 7-ம் தேதி காலை மூன்றாம் கால யாக பூஜையும், மாலை 4-ம் கால யாகபூஜையும், தொடர்ந்து 8-ம் தேதி காலை 5-ம் கால யாகபூஜையும், மாலை 6-ம் கால யாக பூஜையும், 9-ம் தேதி காலை 7-ம் கால யாக பூஜையும், மாலை 8-ம் கால யாகபூஜையும் நடைபெற்றன.

Story image

ஞாயிற்றுக்கிழமை காலை 9-ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமானங்கள் மற்றும் மூலவர் ஸ்வர்ண காமாட்சி அம்மனுக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 108 சக்தி பீடங்களில் வழிபட்டார். முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வர்ண காமாட்சி அம்மனை வழிபட்டனர். விழாக் குழுவினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.