மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜூலை 16-ல் திருப்பதி செல்பவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் ரத்து! ஏன்?

தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.

News image
Updated On :9 ஜூலை 2019, 7:38 am

தினமணி


தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.

ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட உள்ளது.

மேலும் பௌர்ணமி தினமான அன்று மாலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. எனவே அன்று காலை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 

எனவே, நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தர்ம தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன் ஆகியவை 16-ஆம் தேதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.