ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு சிம் கார்டு

அமர்நாத் குகைக் கோயிலுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு சிம் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. 

News image
Updated On :11 ஜூலை 2019, 7:36 am

DIN

அமர்நாத் குகைக் கோயிலுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு சிம் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. 

இது தொடர்பாக பிஎஸ்என்எல் திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர்  ரா.சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

அமர்நாத் குகை கோயிலுக்குச் செல்லும்  யாத்ரீகர்களுக்கு இலகுவான செல்லிடப்பேசி தொலைத்தொடர்பு இணைப்பை அளிக்கும் பொருட்டு பிஎஸ்என்எல், ஜம்மு காஷ்மீர் தொலை தொடர்பு வட்டம் சார்பில், ஜூலை 1 முதல் 15 வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதர மாநில செல்லிடப்பேசி ப்ரீபெய்ட் இணைப்புகளைப் பயன்படுத்த ஜம்மு காஷ்மீரில் அனுமதியில்லை என்பதால், உள்துறை அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அனுமதியுடன், முன்கூட்டியே திறனேற்றப்பட்ட சிறப்பு யாத்ரா சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் அளிக்கிறது. சிறப்புக் கட்டண வவுச்சர்  மற்றும் ப்ளான் வவுச்சர் உள்பட இதன் விலை ரூ. 230.  

மேலும் விவரங்களை w‌w‌w.‌j​a‌n‌d‌k.​b‌s‌n‌l.​c‌o.‌i‌n/​Y​a‌t‌r​a.‌h‌t‌m‌l என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.