மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை: குமரகுரு

திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குமரகுரு தெரிவித்தார். 

News image
திருமலை ஏழுமலையான் திருவுருவப் படத்தைப் பெற்றுக் கொள்ளும் எம்எல்ஏ குமரகுரு. (உள்படம்) மருத்துவர் நிச்சிதா.
Updated On :23 செப்டம்பர் 2019, 9:36 pm

DIN


திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குமரகுரு தெரிவித்தார். 
 ஆந்திர அரசு 36 பேர் கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே அறங்காவலர் குழுத் தலைவராக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி. சுப்பாரெட்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை மூன்று உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். 
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிச்சிதா, எம்எல்ஏ குமரகுரு, சீனிவாசன் உள்ளிட்ட 3 பேர் உள்பட நியமிக்கப்பட்ட, 17 பேர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தனர். அவர்களுக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினார். 
பின்னர், அவர்களுக்கு ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதி அருகே செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
 இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு கூறுகையில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அறங்காவலர் குழு உறுப்பினராக இங்கு அனுப்பி வைத்துள்ளார். முதல் முறையாக தமிழகத்தில் இருந்து, 5 உறுப்பினர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 எனவே  ஏழை, எளிய பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை அறங்காவலர்  குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். பக்தர்கள் பலர்  தமிழக அரசின் சார்பில் திருமலையில் விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளனர். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து ஆந்திர மாநில முதல்வருக்கு பரிந்துரை செய்து, தமிழக அரசின் சார்பில் திருமலையில் விருந்தினர் மாளிகை கட்டப்படும், என்றார்.
 திங்கள்கிழமை மதியம் தமிழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் ரெட்டி ஏழுமலையான் கோயிலுக்குள் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.