திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம்

நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. கடவுள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டாடும் வகையில் இப்பண்டிகை அமைந்துள்ளது.

News image
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம்
Updated On :28 ஜனவரி 2024, 4:01 am

தினமணி

நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. கடவுள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டாடும் வகையில் இப்பண்டிகை அமைந்துள்ளது.

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளான ஆவணி மாத அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளைதான் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி  -  கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாத அஷ்டமி திதி அத்துனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணமே ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த திருநாள் என்பதால்தான்.

அன்றைய தினம், வீடுகளில் கிருஷ்ணருக்கு புத்தாடை, அணிகலன்கள் அணிவித்து வாசனை நிறைந்த மலர்களால் அலங்கரிப்பார்கள். காலையிலிருந்து விரதமிருந்து, கிருஷ்ணரின் துதிப் பாடல்களைப் பாடி, அவருக்குப் பிடித்தவற்றை நைவேதமாக வைத்து வழிபாட்டால், வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

எப்போது கொண்டாட வேண்டும்?

ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு  11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரமானது ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.39 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 9.44க்கு நிறைவடைகிறது.

வழக்கமாக வட மாநிலங்களில் ஜென்மாஷ்டமியை கிருஷ்ண பகவான் பிறந்த நள்ளிரவு நேரத்தில்தான் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகம் போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மாலை 6 மணிக்கு விளக்கு வைத்ததும், கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள் தொடங்குவது வழக்கம். திங்கள்கிழமையன்று நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் பார்த்தும் பூஜையை துவங்கலாம். அந்த வகையில், மாலையில் 7.30 முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் கிருஷ்ணருக்கான பூஜைகளை செய்து, வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

கிருஷ்ண பகவான் பிறந்தநேரத்தில் அதாவது நள்ளிரவில் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் 12.40 மணி வரை பூஜை செய்யலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.