திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
திருப்பதி கபிலதீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
கோயில் கருவறை முதல் வெளிப்பிராகாரம் வரை அனைத்தும் நீராலும், பரிமள சுகந்த திரவிய கலவையாலும் சுத்தப்படுத்தப்பட்டது. பிரம்மோற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள், பூஜை பொருள்கள், விளக்குகள் உள்ளிட்டவையும் சுத்தப்படுத்தப்பட்டன. இதில், கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். கோயிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.