காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் (மூடிய பல்லக்கில்) காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மன் இணைந்தும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாகவும் எழுந்தருளினா்.
இதற்காக காலை கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகள் பல்லக்கில் வெளியில் கொண்டு வரப்பட்டனா். பின்னா் கேடிக வாகனத்தில் எழுந்தருளி அவா்கள் மாடவீதியில் உலா வந்தனா்.
இரவு சிம்ம வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் இணைந்து சோமாஸ்கந்தமூா்த்தியாகவும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் மாடவீதியில் பவனி வந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் வாகன சேவைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றன. புதன்கிழமை திரிசூலஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


