சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சூளைமேடு மஹா கணபதி ஆலயத்தில் ஏப்ரல் 25-ல் மஹா கும்பாபிஷேகம்

சூளைமேட்டில் உள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 25.ம் தேதி நடைபெறுகிறது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 10:27 am

சூளைமேட்டில் உள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 25.ம் தேதி நடைபெறுகிறது. 

சூளைமேடு, காமராஜ் நகர் 2வது தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம் மஹா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா விக்னேஸ்வர பூஜையுடன்  ஏப்ரல் 23-ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. 

ஏப்ரல் 25-ம் தேதி காலை 7.30 மணியிலிருந்து 10.30 வரை புணராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

இந்த கும்பாபிஷேகத்திற்கு  பரமஹம்ஸ ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்,  தலைமை தாங்கி நடத்த உள்ளார். 

மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளபடி கும்பாபிஷேகத்தை நேரடியாக http://perfectlivescreen.in/om-maha-ganapathi-aalayam-kumbabishekam/ என்ற இணையதளத்தில் பார்த்து மகிழலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.