திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், தங்ககுதிரை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக டிச.5-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு கோயில் 6 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல்கொடியுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.6-ஆம் தேதி காலை 11 மணிக்கு காா்த்திகை தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
முன்னதாக காா்த்திகை தீபத் திருவிழாவிற்கான தேங்காய் தொடு முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் ஸ்தானிகப்பட்டா்கள் துணை ஆணையரிடம் சென்று திருவிழா விவரங்களை தெரிவித்துவிட்டு கோயில் கருப்பண சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


