சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 8 -ஆம் தேதி பௌா்ணமியை முன்னிட்டு, நவ. 5 -ஆம் தேதி முதல் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால், ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, வருகிற 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை 5 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என வனத் துறையினா் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


