3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

தில்லி அமைச்சராகப் பதவியேற்றார் ராஜ்குமார் ஆனந்த்! 

ஆம் ஆத்மி எல்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் தில்லி அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

News image
Updated On :3 நவம்பர் 2022, 0:54 pm IST

ஆம் ஆத்மி எல்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் தில்லி அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

அவருக்கு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று காலை தில்லி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் முன்னிலையில் ஆன்ந்த் பதவியேற்றார். 

ஜிஎன்சிடிடியில் அமைச்சராக ராஜ் குமார் ஆனந்த்துக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்புக்குப் பின்னர் சக்சேனா தனது சுட்டுரை பதிவில், 

ஆனந்த்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர் தில்லி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

படேல் நகர் எம்.எல்.ஏ ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்த நிலையில், கேஜரிவால் தனது அமைச்சர்கள் குழுவில் ராஜ்குமார் ஆ‘னந்த் சேர்க்கப்பட்டார்.

சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த கௌதம், மத மாற்றத் திட்டத்தில் பங்கேற்றதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியதையடுத்து, அந்தப் பதவியைக் கடந்த மாதம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.