திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று தங்க பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் மலையப்பசுவாமி வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய வாகன சேவையான கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் ஏழாம் நாளான இன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாட வீதியிலும் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். இதைதொடர்ந்து இன்றிரவு சந்திர சபையில் மலையப்பசுவாமி எழுந்தருளுகிறார்.
நாளை தங்க குதிரை வாகனத்திலும், நாளை மறுநாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.
பிரம்மோற்சவ திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மலையப்பசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான 'விசில்'

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


