எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதை நடும் சாதனை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.

News image
Updated On :3 அக்டோபர் 2022, 11:09 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும்,  நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மாநில மரமான பனை மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பணை விதைகள் நடும் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாவட்டத்தில் உள்ள  288 ஊராட்சிகள் உதவியோடு அந்தந்த பகுதியில் சேகரிக்கப்பட சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான  பனை விதைகளை, அந்தந்த பகுதி பொது மக்கள் மூலம் 5 மணி நேரம் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது.

Story image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரூர்  ஊராட்சிக்குட்பட்ட தரிசு நிலத்தில்  மாவட்ட  ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பனை விதை நட்டு துவக்கி வைத்தார். இதையடுத்து வாலாஜா வட்டம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில்  பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.

இந்த சாதனை நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள், மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

288 ஊராட்சிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய பனை விதைகள் நடும் பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறுகிறது. 288 ஊராட்சிகளில் ஏரிக்கரை, குளக்கரை ஓரங்களில் பனை விதைகள் நடப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.