விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காா்த்திகை மாத பௌா்ணமி, பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்தது.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதையடுத்து நவ.24 முதல் 27 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.