வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் தேரோட்டம் இன்று (மே 19) நடைபெற்றது.
வடபழனி முருகன் கோயிலில்   தேரோட்டம்!
Published on
Updated on
1 min read

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை, யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோயிலில்   தேரோட்டம்!
திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு 'அரோஹரா' முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மேலும், வடபழனி முழுவதும் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com