
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் அக்கிராம மக்களின் தேவதையாக இருந்து வருவது செல்லியம்மன்.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வி. கணேஷ் குருக்கள் தலைமையில் இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனைகள் முடிந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை அடுத்து சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இக்கோயிலில் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பாக கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.
அதன் பிறகு இன்று(மே 19) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை இத்திருக்கோயில் குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் திருமுக்கூடல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, உத்தரமேருர் எம்எல்ஏ க.சுந்தர், எம்பி. க. செல்வம் ஆகியோர் உள்பட கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.