ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி தரிசன முன்பதிவில் மிக முக்கிய மாற்றம்! நாளை முதல்!!

திருப்பதி ஸ்ரீவாணி தரிசன முன்பதிவில் மிக முக்கிய மாற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

News image
திருமலை திருப்பதி- Center-Center-Tirupathi
Updated On :8 ஜனவரி 2026, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய, ஸ்ரீவாணி தரிசனம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜன.9ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்துக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 800 டிக்கெட்டுகள் இதுவரை நேரடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த தரிசனத்துக்கான முன்பதிவும் ஆன்லைனுடன் இணைக்கப்பட்டு விட்டது. ஆனால், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள மையத்திலிருந்து நாள்தோறும் வழங்கப்படும் 200 டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

திருமலையில் உள்ள கோகுலம் விடுதி அருகே ஸ்ரீவாணி டிக்கெட் கவுன்ட்டர்களில் ஆஃப் லைனில் வழங்கப்பட்டுவந்த 800 டிக்கெட்டுகளை இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் அதிருப்தி அடைவதாகவும் அதனால் சோதனை முயற்சியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடையே கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவு நாள்தோறும் காலை 9 ம ணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை இருக்கும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் செயல்படும். முன்பதிவு செய்தவர்கள் அன்று மாலை 4 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஸ்ரீவாணி தரிசனம்

நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இணையதளம் வழியாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

நன்கொடை வழங்கிய பின்னர் பக்தா்கள் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசித்து செல்லும் வகையில் இந்த ஸ்ரீவாணி தரிசன முறை நடைமுறையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.