சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த பெண் சாவு

சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்

Updated On :11 மே 2013, 6:48 am

சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோலாத்துக்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பூங்கா (36). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் சேகோ ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த புதன்கிழமை ஆலையின் சுவர் இடிந்து பூங்கா மீது விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு, அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வீராணம் போலீஸார், ஆலையின் உரிமையாளர் குமரவேலைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.