நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சேலத்தில் 7 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது

சேலம் அன்னதானப்பட்டியில் முன்விரோதம் காரணமாக, 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர்

Updated On :11 மே 2013, 12:16 pm IST

சேலம் அன்னதானப்பட்டியில் முன்விரோதம் காரணமாக, 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சேலத்தை அடுத்த கருப்பூர் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.பாபு (38). கொலை, நகைப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.

இவருக்கும், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற பாபு, இவரது தந்தை மாது உள்ளிட்ட 6 பேர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோரை ஒரு கும்பல் கடந்த 8-ஆம் தேதி அரிவாளால் வெட்டியது.

இதில், பலத்த காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அன்னதானப்பட்டி காவல் துறையினர், வளத்தி குமார் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.

மேலும் சிலர் தருமபுரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சேலம் சண்முக நகரைச் சேர்ந்த கே.மோகன் (32), தருமபுரி, செட்டிக்கரையைச் சேர்ந்த என்.சிவா (31) ஆகிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.