சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

சேலம் மாவட்டம், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள்

Updated On :11 மே 2013, 6:47 am

சேலம் மாவட்டம், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையொட்டி, மேட்டூரிலிருந்து கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

கொளத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால், கடந்த பத்து நாள்களாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வதற்கு வசதியாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, சில கிராமங்களும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்காக, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேட்டூர் முதல் தமிழக- கர்நாடக எல்லையான பாலாறு வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.