சேலம் மாவட்டம், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையொட்டி, மேட்டூரிலிருந்து கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
கொளத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், கடந்த பத்து நாள்களாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வதற்கு வசதியாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, சில கிராமங்களும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதற்காக, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேட்டூர் முதல் தமிழக- கர்நாடக எல்லையான பாலாறு வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






