தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தமிழக அரசு மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

Updated On :11 மே 2013, 6:47 am

தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

சேலம் மாவட்ட திமுக சார்பில் 2-ஆம் கட்ட தேர்தல் நிதியளிப்பு, பொதுக்கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாகத்தான தேர்தல் நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.4 கோடி பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது.

ஓராண்டில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்ற அரசின் வாக்குறுதியும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் குற்ற வழக்குகளும், சட்ட ஒழுங்கு பிரச்னையும் அதிரித்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு கவலைப்படாமல், எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது.

திமுகவினரை பழிவாங்குவதற்காக வழக்குகள் போடுவதைக் கைவிட்டு, தமிழகத்தின்  வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எனினும், எந்த வழக்கையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றார் அவர்.

கூட்டத்துக்கு சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மக்களவை உறுப்பினர் செ.காந்திசெல்வன், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கட்சியின் தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்மாசி வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.