பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :5 மார்ச் 2016, 4:31 am IST

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோனூர் ஊராட்சியில் உள்ள கந்தனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு நங்கவள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் ந.செந்தில்குமார் தலைமை வகித்தார். கோனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவு மேலாண்மை உத்திகள், மறுசுழற்சி பயன்பாடு மூலம் கூடுதல் வருமானம் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு முறைகள் பற்றியும், பண்ணைக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிர்தா, உதவி மேலாளர்கள் இளையராஜா, ராஜேஷ்குமார் மற்றும் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.