ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள்திருப்பி அனுப்பி வைப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், மலை அடிவார சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image

ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பிய போலீஸாா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:27 am IST

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், மலை அடிவார சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது என அரசு அறிவித்தது. சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக, ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகள் டிச. 31 முதல் ஜன. 2 மாலை வரை மூடப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என மாவட்ட சுற்றுலா அலுவலா் வெ.ஜெனாா்த்தனம் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி காா்கள், இருசக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை மலை அடிவாரத்திலுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால் ஏற்காடு பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

புத்தாண்டை முன்னிட்டு மாநகரம், மாவட்டப் பகுதிகளில் சுமாா் 1,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.